
* பனீர் - சீஸ் இரண்டுக்கும் என்ன வேறுபாடு? எப்படி
உப யோகப்படுத்துவது?
-
எஸ்.வளர்மதி,கொட்டாரம்
இரண்டுமே பாலைத்
திரித்துத் தான் தயாரிக்கப்படுகின்றன. பாலைக் கொதிக்க வைத்து
எலுமிச் சைச் சாறு, வினிகர், தயிர் போன்ற வற்றைச் சேர்த்துத்
திரித்து `பனீர்' தயாரிக்கப்படுகிறது.
வேறுபட்ட மல்டி
ஆர்கானிஸம், பாக்டீரியா உபயோகித்து பாலைத் திரித்து சில நாட்கள்
அல்லது வாரங் களுக்கு பிராஸஸ் செய்து சீஸின், டெக்ஸ் சர்
(கூஞுதுணாதணூஞு) மற்றும் மணம் நிர்ணயிக்கப்படு கிறது.
பனீரைத் துருவி பரோட்டாவாகச் செய்யலாம்; க்யூபுகளாக வெட்டி,
பாலக் கீரையுடன் உபயோகிக்கலாம். கெட்டித் தயிர் மற்றும் மசாலாப்
பொடிகளுடன் ஊற வைத்து மைக்ரோவேவ் அவனில் டிக்காவாக க்ரில்
செய்யலாம்; எண்ணெ யில் பொரிக்கலாம்.
சீஸ்களை பீட்ஸாவின்
மேல் போட்டு மைக்ரோவேவ் அவனில் `பேக்' செய்ய லாம் (உதாரணம்
மொரைல்லா சீஸ்) சில வகை சீஸ்களைத் துருவி, பிரட்டுடன் நேரிடையாக
டோஸ்ட் செய்யலாம். (உதாரணம்: காட்டேஜ் சீஸ்). மேலும் சில வகை
சீஸ்களை, பிரட் ஸாண்ட்விச்சில் பரவலாகத் தடவி உபயோகிக்கலாம்.
(உதாரணம் க்ரீம் சீஸ்)
* குறைவான துவரம்
பருப்பில் மணமான சாம்பார் செய்யலாமா?
-
சியாமளா சுவாமிநாதன், திருவனந்தபுரம்
வாணலியில்
ஒரு கப் தனியா, அரை கப் துவரம் பருப்பு, வர மிளகாய் சேர்த்து
வறுக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு
(தேவையானால்) சேர்த்து மிக்ஸி யில் கெட்டியான விழுதாக அரைத்துக்
கொள்ளவும்.
புளிநீர் + சாம்பார்பொடி + உப்பு + காய்கள்
கொதிக்கையில் அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
தேவையா னால் தேங்காய்த் துருவலும் சேர்த்து அரைக்கலாம். சாம்பார்
ருசியாக இருக்கும்.
துவரம் பருப்பு, வர மிளகாய், கொள்ளு,
உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பு விலை அதிகமாக இருக்கும்போது, குழம்பில் நான்கு
டேபிள் ஸ்பூன் போட்டுக் கொதிக்கவிடலாம்.