Mangayar Malar
Mar 2010


அறிவிப்புகள்
கருத்துகள்
உங்கள் பகுதி
சமையல்
அழகு
மருத்துவம்
ஆன்மிகம்
திருமண மலர்





Designed & hosted by

 

நம் நாட்டில் பல காலமாக ஒரு வழக் கம் உண்டு. பிறந்த குழந்தையை முதன் முதலாக ஒரு கோயிலுக்கு எடுத்துச் சென்று இறைவழிபாடு செய்துவிட்டு வருவார்கள். அந்த வழக்கப்படி இராமலிங்கரை, அவ ரது பெற்றோர், சிதம்பரம் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். இறைவழிபாடு முடிந்தவுடன் கற்பூர ஆரத்தி காட்டி னார்கள். கோயில் கருவறையில் கற்பூர தீப ஒளி பரவியவுடன் அதனை சில வினாடிகள் பார்த்த குழந்தை, சிறிது நேரம் சிரித்ததாம்.

சாதாரணமாகக் குழந்தைகள் தூங்கும் போதோ, அல்லது விழித்திருக்கும் போதோ தானாகச் சிரித்தால், போன ஜென்மத்து மகிழ்ச்சியான அனுபவங் களின் நினைவு என்று நாம் சொல்லு வோம். ஆனால், இராமலிங்கர், கற்பூர தீப ஒளி பரவியவுடன், தனக்குள்ளே ஓர் இன்ப ஊற்றுப் பெருக்கெடுத்தது. ஒளி மயமான இறைவனைத் தமக்குள்ளே தரிசித்து அந்தப் பரவசத்தில் மூழ்கியதால் பெருகிய ஆனந்த வெள்ளத்தின் வெளிப் பாடே அந்த நிலை என்று பின்னாளில் கூறுகிறார்.

இராமலிங்கர், தமது மூன்றாவது வயதி லேயே தனது தந்தையாரை இழந்தார். குடும்பம் வருமானம் எதுவுமின்றி வறுமையில் வாடியது. அடிகளாரின் மூத்த சகோதரரான சபாபதி, குடும்பப் பொறுப்பை ஏற்றார். குடும்பம் சென் னைக்கு இடம் பெயர்ந்தது. ஆன்மிக சொற் பொழிவுகள் நடத்தியும், பள்ளிச் சிறுவர் களுக்குத் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுத் தும் சொற்ப வருமானம் பெற்றுக் குடும் பத்தை நடத்தி வந்தார் சபாபதி. ஐந்து வயது நிரம்பிய இராமலிங்கரை ஒரு தமிழ்ப்புலவரிடம் சேர்த்து, கல்வி கற்கு மாறு செய்தார். கல்வி கற்பதில் இராமலிங் கருக்கு ஈடுபாடில்லை.

சென்னையில் கந்தக் கோட்டத்தில் உள்ள இறைவனிடம் பற்றுக் கொண்டு, தன்னுடைய நேரத்தையெல்லாம் கோயிலி லேயே கழித்தார். பக்திப் பாடல்களை இயற்றுவதிலும், தியானம் செய்வதிலும் இச்சிறுவனுக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்த அந்த ஆசிரியர், கல்வி கற்பிப்பதை நிறுத்திவிட்டார். சகோதரரான சபாபதிக்கு கோபம் வந்து விட்டது. சிறுவனுக்கு உணவும், உடையும் மறுக்கப்பட்டது. இராமலிங்கர் வீட்டை விட்டுத் துரத் தப்பட்டார்.

முழுமையாய் வாசித்து மகிழ சந்தா செலுத்தி
கல்கி / மங்கையர் மலர் வாங்குங்கள்.

 
No comments posted.

 

Kalki, Mangayar Malar, Gokulam Tamil, Gokulam English are trademarks of:
Bharathan Publications (P) Limited.
(C) 2010, Bharathan Publication (P) Limited.
All rights reserved.
  Bharathan Publications (P) Limited.
Kalki Buildings
47NP, Jawaharlal Nehru Road, Ekkaduthangal,
Chennai, India, Pin: 600 032.
Phone: 91-44-43438888 
Fax: 91-44-
2225 1021