
கீமோதெரபி, ஆக்ஸிஜன் சிலிண்டர், ஆஸ்பத்திரி சேர்க்கை, உயிருக்கு
ஆபத்து என்றெல்லாம் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். இடையிடையே,
மாணவர் களுக்கு கலை வகுப்புகள் எடுப் பது, என் குழந்தைகளோடு
கலாட்டா செய்வது என்றெல் லாமும் இருக்கிறேன். இதில் எந்த சாரதா
நிஜம்? நான் சொல்வதில் எது உண்மை? எது பொய்? என்று உங்களில் சில
பேருக்காவது இக்கேள்விகள் எழும் வாய்ப்பு இருக்கிறது.
இந்தத் தொடரின் நோக்கம், எனக்கு ஏற்பட்டிருக்கும் விசித்திர நோயின்
தன்மை யையும், அதை நான் எதிர் கொள்ளும் விதத்தையும் பற்றி
இருப்பதால், அதை விலாவாரி யாக விவரித்துக் கொண்டிருக் கிறேன்.
இதைத் தாண்டி, எப்போதெல்லாம் என் உடல் இயல்பு நிலை யில்
இருக்கிறதோ, எப்போதெல்லாம் சோர்வும், பிரச்னையும் குறைகிறதோ,
எப்போதெல்லாம் இவற்றையெல்லாம் மறந்து ஆக்கப்பூர்வமாக செய்ய உடல்
ஒத்து ழைக்கிறதோ, அப்போதெல்லாம் என்னைப் பார்த்தால், நோயாளி என்று
நம்பமாட்டீர் கள். இந்த நோயே அப்படிப்பட்டது என்பது ஒன்று; நானும்,
`ஹை எனர்ஜி' பெண்மணி என்பதால், அவ்வளவு சீக்கிரம் நோய் என்னை
ஆட்கொள்ள, நான் அனுமதிக்க வில்லை என்பது மற்றொன்று.
என்
மகள், விளையாட்டு வீராங்கனை என்பதால், அவள் பந்தயங்களில் பங்
கேற்றுக் கொள்ளும்போது அவளோடு பிரயா ணம் செய்வதோடு, அது சம்பந்தமான
எல்லா விஷயங்களையும் முடிந்த வரை வேறு யாரையும் தொந்தரவு
செய்யாமல், நானே பார்த்துக் கொள்கிறேன். தையல், ஸ்லோகங்கள்,
பக்திப் பாடல்கள், பள்ளிப் பாடம், இப்படிப் பலவற்றிலும் வெளி
யாருக்கு வகுப்புகள் எடுக் கிறேன்.
`ஐயோ, நீ கத்திப் பாடவே
கூடாது', `மாணவர்களுக்கு வகுப்பெல்லாம் எடுத்தால் அவர்களோடு கத்த
வேண்டி வரும்; அதையெல்லாம் தவிர்க்க வேண்டும்' என்று கூறும்
மருத்துவர்கள், இவற்றையெல்லாம் செய்வதன் மூலம் நான் அதிக உற்சாகமாக
இருப்பதைப் பார்த்து, மன வலிமையையும் கடவுள் பக்தியையும்
தகர்க்கும் சக்தி உடல் நலக் குறைவுக்கு இல்லை என்ற மருத்துவப்
புத்தகங்களில் சொல்லப்படாத ஒரு விஷயத்தை அவர்கள் உணருகிறார்கள்.
இந்த நோயின் தன்மை வெறுப்படை யச் செய்யும் அதே நேரத்தில்,
இதில் ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது. இது மொத்த மாக என்னைப்
படுக்கையில் தள்ளி, எனக் கும் என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும்
விரக்தியை ஏற்படுத்தாமல், இயல்பு வாழ்க் கையை ரசிக்கும்
வாய்ப்பையும் எனக்குத் தருகிறது. அதனால், அதுபோன்ற நாட்களை யும்,
நேரத்தையும் வீணடிக்காமல், கெட்டி யாகப் பற்றிக் கொண்டு முழுவதுமாக
அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
