
‘கலாட்டா கல்யாணம்’ படத்தின் பாடல் காட்சி சென்னை அண்ணாநகர்
டவரில் நடந்தது. கூட்டத்தில் சிலர் சினிமா நடிகைகளைப் பற்றி ரசனைக்
குறைவாக கமெண்ட் அடித்தார்கள். அப்போதுதான் ஆச்சி ரியாக்ஷன்
பார்த்து ஆச்சரிய மடைந்தேன் என்று சொல்லியிருந்தேனே நினை
விருக்கிறதா? அப்பப்பா ஆச்சிக்கு எவ்ளோ கோபம் வந்தது தெரியுமா?
அவங்களைப் பாத்துப் பேசினாங்க பாருங்க. அடுத்த நிமிடம், அப்படி
தவறாகப் பேசினவங்க, தங்கள் செயலுக்காக மன்னிப்புக் கேட்டாங்க.
அதுக்கப்புறம் ஆச்சி மேலே எனக்கு இன்னும் மரியாதை அதிகமாச்சு.

எழுத்தாளர் பி.வி.ஆர். ‘கல்கி’யில் தன்னுடைய ‘நீரோட்டம்’ நாவலை
நாடகமாக மேடை ஏற்றியபோது, அதில் வரும் சாருங்கற ‘துறு துறு’ பெண்
கேரக்டர்ல நான் நடிச்சேன். சினிமாவில் காமெடி ராணியாக, நான்
மிகப் பாப்பு லராக இருந்தாலும் நாடகத்தில் எனக்கு சீரியசான ரோல்.
சென்னை சபாக்களின் எலைட் ஆடியன்ஸ் அதை ஏற்றுக்கொண்டாலும்,
வெளியூர்களில் என் சீரியஸ் நடிப்பு எடுபடவில்லை. அதனால், நானும்
கொஞ்ச நாளைக்கு நாடகம் வேணாம்னு முடிவு செஞ்சேன்.
1970களில் பாலசந்தர் சார், சோ, மேஜர், ஒய்.ஜி.பி போன்ற
ஜாம்பவான்கள் எல்லாம் நாடகக் குழுக்கள் நடத்திக் கொண்டிருந்தனர்.
அந்தச் சமயத்தில் வாணி கலா மந்திர் என்கிற அமெச்சூர் நாடகக்
குழுவினர், என்னை தங்கள் குழுவில் நடிக்க கூப்பிட்டனர். சினிமாக்
காரங்க நடித்தால், நாடகங்களுக்கு சென்னை சபாக்களிலும், வெளியூர்
களிலும் சுலபமாகத் தேதி வாங்கிவிடலாம் என்ற நிலைமை அப்போ
இருந்தது. ஒய்.ஜி.பி.யின் குழுவுக்காக ‘ஃப்ளைட் 172’ நாடகம்
எழுதிக் கொடுத்து பாப்புலராக இருந்த மௌலியை எங்களுக்கு ஒரு
நாடகம் எழுதித் தரச் சொல்லி அதற்கு, பூஜையும் நடந்தது. அப்போது
ஒய்.ஜி.பி. யின் குழுவில் நடித்துக்கொண்டிருந்த ஏ.ஆர்.எஸ்.
எங்கள் நாடகத்தை இயக்கித் தரச் சம்மதித்தார். ஆனால், மௌலியால்
குறித்த காலத்துக்குள் நாடகம் எழுதிக் கொடுக்க முடியவில்லை.
அப்போது, ஏ.ஆர்.எஸ்ஸால் ரொம்ப திறமையான யங்ரைட்டர்" என
எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டவர்தான் விசு. ‘தேவி யர்
இருவர்’ என்ற விசுவின் நாடகத்தில் எனக்கு சீரியஸ், காமெடி என்று
டபுள் ரோல். அதற்கப்புறம் விசு எங்களுக் கெழுதிய ‘சுஜாதா’, ‘பஞ்ச
பூதங்கள்’, ‘கனவு கண்டேன் கண்ணா’ ன்னு எல்லா நாடகங்களுமே பெரிய
ஹிட்!
வழக்கமான வீடு செட் இல்லாமல் ஒரு கார்டன் செட்
போட்டு நடத்திய நாடகம்தான் வெங்கட் எழுதிய ‘மெழுகு பொம்மைகள்’.
கலைவாணர் அரங்கத்தில் அந்த நாடகத்தைப் பார்த்த டைரக்டர்
திருலோக்சந்தருக்கு கதை ரொம்பப் பிடிக்கவும், இந்தக் கதையை நான்
சினிமாவா எடுக்கப் போறேன்"ன்னு சொன்னார். எங்க எல்லோருக்கும்
ரொம்ப சந்தோஷம். ஆனா, இந்த நாடகத்தை இனிமேல் போடாமல் இருங்க"
என்றதும், ஏராளமான சபாக்களுக்கு தேதி கொடுத்திருந்த நாங்கள்,
அதிர்ந்து போனோம். அது மட்டுமில்லாமல் நாடகத்துக்கான செட்,
ஸ்பெஷல் எஃபெக்ட், பைலட் காஸ்டியூம் என்று (அன்றைய தேதியில்)
பதினைந்தாயிரம் ரூபாய் செலவு ஆகியிருந்தது. அப்புறம் அவரோடு
பேசி, படத்தின் ஷூட்டிங் முடிகிறவரை நாடகத்தை நடத்த அனுமதி
வாங்கினோம். அந்தப் படம்தான் சிவாஜி நடித்த ‘பைலட் பிரேம்நாத்’.
நாடகத்துல நான் நடிச்ச பார்வை இல்லாத மகள் வேடத் துல சினிமாவுல
ஸ்ரீதேவி நடிச்சாங்க. சில பேர் நாடகத்துல நீங்க ரொம்ப நல்லா
நடிக்கறீங்க. சினிமாவுலகூட உங்களையே நடிக்க வெச்சிருக்கலாம்"னு
சொல்லிப் பாராட்டிங்க. பாவம்! அவங்களுக்கு மேடை நாடகம் வேறு;
சினிமா மார்க்கெட் வேறுன்னு தெரியலை!
எங்களுக்காக
வெங்கட் எழுதின நாடகம் ‘சக்கரம் சுழல்கிறது’. முதியோர் பற்றிய
நாடகம். நாடகத்தைப் பார்த்து விட்டு மனம் நெகிழ்ந்த சாவித்திரி
வைத்தி அம்மா, தான் நடத்தி வரும் விஸ்ராந்தி முதியோர்
இல்லத்துக்கே வந்து நாடகத்தை நடத்தணும்னு கேட்டார். விஸ்ராந்தி
இல்லத்துக்குப் போய் நாடகம் போட்டதும் அங்கே இருந்த பாட்டிகள்
எல்லோரும் மனம் நெகிழ்ந்து கண் கலங்கி பாராட்டியது எனக்கு
ஆயுசுக்கும் மறக்காது.
பெற்ற குழந்தைகள் வளர்ந்து,
தனிக்குடித்தனம் போகிறபோது அதைப் பார்த்து மனம் ஒடிந்து போகாமல்,
வயதான கணவனும், மனைவியும் தங்கள் வாழ்க்கையைத் தனிமையில் தொடரும்
சோகத்தைச் சுட்டிக் காட்டியது ‘தோப்பில் ஒரு தனிமரம்’ என்ற
நாடகம். வாணி மகாலில் அந்த நாடகத்தைப் பார்த்த ஒரு முதிய தம்பதி,
நாடகம் முடிந்ததும் என்னையும், ஏ.ஆர்.எஸ்.ஐயும் பாராட்டிவிட்டு,
எங்க கண்ணைத் திறந்து வெச்சீங்க!"ன்னு சொல்லி, ‘தடால்’ என்று
எங்கள் காலில் விழுந்தது எங்களைப் பேரதிர்ச்சிக்குள் ளாக்கியது.
டீ.வி பிரபலமான போது, அதில் பல நாடகங்களில் நடிச்சேன். அதன்
மூலமா கிடைச்ச வீச்சு அபாரமானது. நான் டீ.வி.யில நடிச்ச முதல்
சீரியல் ‘தினேஷ் - கணேஷ்’. ஜெயஸ்ரீ பிக்சர்ஸ் எஸ்.வி. ரமணன்
ஊட்டிக்குப் போய் பத்து நாள் ஷூட் பண்ணின சீரியல் அது. நானும்
வெண்ணிற ஆடை மூர்த்தியும் ஜோடி. தவிர டெல்லி கணேஷ், காத் தாடி,
ரவி ராகவேந்தர், சுலக் ஷணா எல்லோரும் நடிச்சாங்க. கோவை அனு
ராதாவின் ‘காஸ்ட்லி மாப் பிள்ளை’ சீரியல்ல எனக்கு அதிகாரம்
பண்ணும் மாமியார் ரோல். ரொம்ப டிமாண்டிங் கேரக்டர்.
அமெரிக்காவிலேயே எடுக்கப்பட்ட சீரியல், சாவி எழுதின ‘வாஷிங்டனில்
திருமணம்’. அது சீரியலாக எடுக்கப்பட்டபோது, அதற் கேற்ப சித்ராலயா
கோபு, ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களைச் செய்தார். ஆனந்தவிகடனில்
வெளியான அந்தக் கதையைப் படித்து ரசிச்சிருக்கேன். அப்புறம்
மேடையில் நாடகமாக நடிக்கப்பட்ட போது பார்த்து ரசிச்சிருக்கேன்.
நாடகத்தில் ஜான வாச காரையே மேடையில் கொண்டு வருவாங்க.
அமெரிக்காவில் ஷூட்டிங்கிற்காக மடிசார் புடைவை கட்டிக்கொண்டு
நான் நடந்தபோது, என்னை ஆச்சரியமாகப் பார்க்காதவர்கள் இல்லை. அதுல
எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய பாக்கியம்.
எனக்கு சின்னத்திரையில் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்த
இன்னொரு கேரக்டர், பாக்கியம் ராமசாமி உருவாக்கிய பிர பலமான
(அப்பு சாமி) சீதாபாட்டி கேரக்டர். அது டீ.வி சீரியலாக
எடுக்கப்பட்ட போது அப்புசாமியாக வெண்ணிற ஆடை மூர்த்தி நடிக்க,
நான் அவருக்கு ஜோடி. மற்ற குறிப்பிடத் தக்க சீரியல்களில் ‘அலை
ஓசை’, ‘இப்படிக்கு் தென்றல்’, ‘ஆனந்த பவன்’, ‘மாண்புமிகு
மாமியார்’ போன்றவற்றுக்கும் இடமுண்டு.
சினிமாவில் என்
மீது காமெடி முத் திரை அழுத்தமாகக் குத்தப்பட்டு வந்தாலும்,
சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையாக
என்னால் பரிமளிக்க முடியும்னு நிரூபிக்க எனக்கு வாய்ப்பு
ஏற்படுத்திக் கொடுத்த சீரியல் ‘மாண்புமிகு மாமியார்’. என்
திறமைக்கு அங்கீகாரமாக எனக்கு இதுவரை பெரிய அளவில் பரிசுகள்,
விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், மைலாப்பூர் அகாடமி,
‘மாண்பு மிகு மாமியார்’ தொடருக்காக எனக்கு ‘சிறந்த நடிகை’ விருது
கொடுத்து கௌரவித்தது.
என் கடைசி மூச்சு உள்ளவரை என்
நடிப்புத் திறமையைக் காட்டணும் என்பதுதான் என் ஆசை. என்னோட
சினிமா, நாடக, டீ.வி, அனுபவங்களை ‘மங்கையர் மலர்’ மூலமா உங்களோட
பகிர்ந்துகொண்டது என் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு!"