Mangayar Malar
Sep 2010


அறிவிப்புகள்
கருத்துகள்
உங்கள் பகுதி
சமையல்
அழகு
மருத்துவம்
ஆன்மிகம்
திருமண மலர்





Designed & hosted by

 

அன்று இரவு சரிதா ஓய்வாய் இருக்கும் நேரம், அம்மா ஹோம் வொர்க் முடிச்சுட்டேன்; ஓகேவா பாரும்மா" என்றான் விட்டல். சரிதாவும் ஹோம் வொர்க்கை சரிபார்த்து, ஓகே" என்றாள்.

...ய்ய்ய்யா... நாளைக்குப் பார்ட்டி! என்ன டிரஸ் போடணும்மா?"

எல்லாம் நான் எடுத்து வைக்கிறேன்; அஞ்சு மணி வரைக்கும் தூங்கணும், ஆறு மணிக்கு சுஜாதா அக்கா கூட்டிட்டுப் போய்விடுவாங்க; கேம்ஸில் தோத்துப் போனவங்க யாரையும் ஷேம் சொல்லக் கூடாது. நான் ஏழு மணிக்குள்ளே வந்து டறேன்" என்று பெரிய ‘டூஸ் அண்ட் டோண்ட்ஸ்’ லிஸ்ட் போட்டாள்.

அடுத்தநாள், விட்டல் பார்ட்டி நினை வால் தூங்காது, சுஜாதாவை நச்சரித்ததால், அரை மணி நேரம் முன்னதாகவே போய்ச் சேர்ந்தார்கள். ஆறு மணிக்கு மேல் விருந் துக்கு அழைக்கப்பட்டவர்கள் ஜோடி ஜோடியாக பிள்ளைகளுடன் வர ஆரம்பித் தார்கள்.

அன்று சுந்தரியின் தங்கை வசந்தியின் பிறந்த நாளும்கூட. அது யாருக்கும் தெரிய வில்லை. அதனால் சற்று நேரத்துக்குப் பிறகு கேக் வெட்டப்பட்டது. விட்டல் தான் கைகொட்டி உச்சக் குரலில் ‘ஹேப்பி பர்த்டே’ பாடினான். எல்லாருக்கும் கேக் விநியோகம் செய்த பிறகு, விளை யாட்டுகள் தொடங்கின.

அடுத்தது, ‘மியூசிக்கல் சேர்’. அமீர் கானின் ‘சாரே ஜமீன் பர்’ படத்தின் பாட்டு ‘பம்பம் போலே’ போட்டு ஆரம்பித்தாள். பிள்ளைகளுக்கு ஒரே குஷி. விட்டலுக்கும் அது ஃபேவரிட் ஸாங். அவ்வப்போது அந்தப் பாட்டுக்கேற்றவாறு விட்டல் குதித்து ஓடும் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்தவாரே சரிதா, உள்ளே வந்து உட் கார்ந்தாள். ஆட்டத்தின் நாற்காலிகள் ஒவ் வொன்றாக குறைந்தது. கடைசி நாற்காலி இருந்தபோது விட்டலும் வசத்தியின் அஞ்சு வயசு பெண்ணும் ஓடிக் கொண்டி ருந்தார்கள்.

‘ஒரு வேளை விட்டல் தோற்று விட்டால் அதைத் தாங்குவானோ?’ என்று ஏனோ இவள் உள்ளுக்குள் பட்டாம் பூச்சி ஆடத்தொடங்கியது. மியூசிக் நின்றது. இரண்டு பிள்ளைகளும் முன்னும் பின்னும் ஓடினார்கள். ஆஹா... இந்த ஆட் டத்தில் யார் ஜெயிப்பார்கள்! ஒரே கர கோஷத்துக் கிடையே விட்டலை அந்தக் கடைசி நாற்காலியின் மேலேயே நிற்க வைத்து எல்லாரும் பலமாகக் கைகளைத் தட்டினார்கள்.

வசந்தி அடுத்த ஆட்டத்துக்கு எல்லா ரையும் அழைத்தாள். அந்தச் சமயம் விட் டல், அவன் அம்மாவைப் பார்த்து அவளி டம் ஓடினான்.

அம்மா எப்ப வந்தே? மியூசிக்கல் சேர்ல நான் தான் ஃபஸ்ட்"

நீ, முயல்குட்டி போல ஓடும்போதே வந்தேன். விட்டல் சேம்பியன் ஆச்சே; அத வேற சொல்லணுமா?"

அம்மா, ஒன் மோர் கேம்"

ஓகே, ஆல் த பெஸ்ட்! யாரையும் கிண்டல் செய்யாதே" என்று அனுப்பி வைத்தாள்.

வசந்தி எல்லா பிள்ளைகளையும் சேர்த்து அடுத்த ஆட்டத்தைப் பற்றி விவரித்து ‘ஆன் யுவர் மார்க், கெட் செட் கோ’ என்று தொடங்கினாள். எல்லாரும் காம்பௌண்ட் உள்ளே இருக்கும் தென்னை மரத்தைச் சுத்தி வந்து, வசந்தி உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு ஓடி வந் தார்கள். முதலில் ஓடி வந்தது விட் டல்தான். பிறகு வசந்தியிடமிருந்த பெட்டி யிருந்து ஒவ்வொரு பேப்பர் சுருள் எடுத்துக் கொண்டு வெளியில் ஓடினார்கள். அங்கும் விட்டல்தான் முதல். பிறகு காகிதத் தாளைப் பிரித்துப் பார்த்து எல்லாரும் வராந்தாவுக்கும் வெளியிலும் நீ முந்தி நான் முந்தி என்று அங்கும் இங்கும் ஓடி இடித்து விழுந்து ஒரே அமர்க்களமாக் கினார்கள்.

வராந்தாவிலுள்ள, எல்லாருடைய செருப்பு, ஷூ இன்னும் சில பொருள்கள் எல்லாம் கலைக்கப்பட்டன. இத்தனைக்கு மிடையில், விட்டல் அமைதியாக முதலில் உள்ளே நுழைந்தான். பிறகு மூன்று பேர் விட்டலை முந்திக் கொண்டு ஓடிப்போய் வசந்தியிடம் நின்ற பிறகு ஆட்டம் நிறுத்தப்பட்டது. விட்டல், சோகம் தோய்ந்த முகத்துடன் அவன் அம்மாவிடம் சென்று,

அம்மா நான் தோத்துப் போயிட் டேன்" என்றான்.

போகட்டும் விடு. நான்தான் சொன் னேனே, தோத்துப் போனா ஃபீல் பண்ணக் கூடாதுன்னு; நெக்ஸ்டைம் வின் பண்ணலாம்"

நெக்ஸ்டைம் கூட முடியாதுமா!"

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரி, அருகே வந்து, சரிதாவையும் விட்டலை யும் பார்த்து, வசந்திக்கு இன்னும் விஷ யம் தெரியாது" டோன்ட் ஒர்ரி விட்டல், அடுத்த முறை இந்த விளையாட்டு இருக் காது" என்றாள். இனிமே தோத்தாக்கூட ஒர்ரி பண்ணிக்கமாட்டேன் ஆன்டி; அம்மா சொல்லியிருக்காங்க" என்றான் விட்டல்.

சரிதாவுக்கு அது என்ன விளையாட்டு என்று புரியவில்லை. விட்டல் கையி லிருந்த சீட்டை வாங்கிப்பார்த்தாள். இதுவரைக்கும் ஒரு சவாலாக அடக்கி வைத்த சரிதாவின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டவிருந்தது; அதை விட் டலின் முன் சிந்த விடாமல் தடுத்தாள். மீண்டும் அந்தக் காகிதத் துண்டைப் பார்த் தாள். அவள் பார்வையில் விழுந்தது: விட் டல் சிந்திய கண்ணீர்த் துளியும் அதற்கடி யிலிருந்த ‘உன் அப்பாவின் ஷூவைக் கண்டுபிடி’ என்ற எழுத்துகளும்.

 

முழுமையாய் வாசித்து மகிழ சந்தா செலுத்தி
கல்கி / மங்கையர் மலர் வாங்குங்கள்.

 
No comments posted.

 

Kalki, Mangayar Malar, Gokulam Tamil, Gokulam English are trademarks of:
Bharathan Publications (P) Limited.
(C) 2010, Bharathan Publication (P) Limited.
All rights reserved.
  Bharathan Publications (P) Limited.
Kalki Buildings
47NP, Jawaharlal Nehru Road, Ekkaduthangal,
Chennai, India, Pin: 600 032.
Phone: 91-44-43438888 
Fax: 91-44-
2225 1021